4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!
Read Time:1 Minute, 17 Second
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூர் நகரைச் சேர்ந்த அந்த குழந்தை, நேற்று முன்தினம் அறுவடைக்காக வயலுக்குச் சென்ற தன் தாயுடன் சென்றிருந்தாள். தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தை தனியாக இருந்திருக்கிறாள். இதைக் கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
இதுபற்றி குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Average Rating