ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

Read Time:2 Minute, 9 Second

1e88e673-63d3-4572-adcd-98218e58c1e6_S_secvpfதிருச்செங்கோடு அருகே உள்ள சூரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் பி.டெக் படித்து உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆதிச்சபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ராஜேஷ்வரன். இவர் பிசியோதெரபி படித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரம்யாவும், ராஜேஷ்வரனும் வேலை பார்த்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வேதனை அடைந்த காதல் ஜோடி இருவரும் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் ஈரோட்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ்வரன்– ரம்யா இருவரும் இன்று ஈரோடு மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு போலீசாரிடம் தங்களை சேர்ந்து வாழ வைக்கும் படியும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர். இதைதொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகள், காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
Next post சிவகங்கை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு!!