`மிருகம்’ படத்தில் பத்மபிரியா மீண்டும் நடித்தார்

Read Time:1 Minute, 21 Second

`மிருகம்’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவை டைரக்டர் சாமி கன்னத்தில் அறைந்ததால் பிரச்சினை உருவானது. பின்னர் பத்மபிரியாவிடம் டைரக்டர் சாமி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மிருகம் படத்தின் படப்பிடிப்பு மதுரை அடுத்த குறண்டியில் நேற்றுமுன்தினம் மீண்டும் தொடங்கியது. முதல் நாள் பத்மபிரியா ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். அந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் அவர் சென்னைக்கு சென்று விட்டார். நேற்று 2-வது நாளாக படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது டைரக்டர் சாமி காட்சிகளை படமாக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு குறண்டியில் இன்னும் 3 நாட்கள் நடைபெறும் என்றும், அப்போது பத்மபிரியா நடிக்க வேண்டிய ஓரிரு காட்சிகள் படமாக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புத்திசாலியான இளைய மகனின் ரத்தத்தை மூத்த மகனுக்கு செலுத்த முயன்ற கொடூரம் : விபரீத செயலில் ஈடுபட்ட டாக்டர் தம்பதி கைது
Next post பெண்ணின் கண்ணில் 20 செ.மீ., நீள புழு