அண்டார்டிகாவில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோருகிறது
Read Time:56 Second
மனித இனமே இல்லாத பனிப்பலைவனமான அண்டார்டிகா தென்துருவப்பகுதியில் உள்ளது. இந்த பூமியில் சொந்தம் கொண்டாடும் நாடுகள் தங்கள் கோரிக்கையை 2009-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதிக்குள் முன்வைக்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அண்டார்டிகா பிரதேசத்தில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோர திட்டமிட்டு உள்ளது. இங்கிலாந்து உரிமை கோரும் பகுதிக்கு தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டைனா, சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருவதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று தெரிகிறது.