இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு!!
திருமணம் என்பது புனிதமானது, எனவே திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்ளி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் சவுதாரி “திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக சர்வதேச சமூகங்கள் ஏற்கொண்டாலும், இந்தியாவிற்கு அது ஒத்துவராது, இதற்கு காரணம் கல்வி, அறியாமை, ஏழ்மை, எண்ணற்ற சமூக பழக்க வழக்கங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் சமூகத்தின் மனப்போக்கை ஆகியவை தடையாக உள்ளது” என தெவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வளர்களும், பெண்ணிய அமைப்புகளும் கடும் கண்டணம் தெரிவித்துள்ளன.
ஐ,நாவின் அறிக்கைப்படி இந்தியாவில் திருமணம் ஆன பெண்களில் 75 சதவீதம் பேர் ஏதோ ஒரு சமயத்தில் அவர்களின் கணவர்களால் கட்டாய பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதாக கனிமொழி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகது.
Average Rating