12 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்று தற்கொலை செய்த விவசாயி!!

Read Time:1 Minute, 35 Second

e6666ab1-f40e-440e-948b-76fb89f429b3_S_secvpfதெலுங்கானா மாவட்டத்தில் இன்று மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று, மனைவியையும் வெட்டி காயப்படுத்திய விவசாயி தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள அடிலாபாத் மாவட்டத்தின் பைன்ஸா மண்டலம் அருகே இருக்கும் குண்டேகான் கிராமத்தை சேர்ந்த விவசாயியான தாதா ராவ் (40) இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிபோதையில் தனது 12 வயது மகனான மாருதியை துடிதுடிக்க கோடரியால் வெட்டிக் கொன்றார்.

இதிலும், வெறி அடங்காமல் மனைவி கவிதாவையும் கோடரியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவரும் இறந்து விட்டதாக கருதிய தாதா ராவ், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து, சில நிமிடங்களுக்குள் பலியானார். இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்று பைன்ஸா புறநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 இளைஞர்கள் பலி!!
Next post பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா?: திருமண மேடையில் மணமகனை ஓடவிட்ட பட்டதாரி பெண்!!