83 வயது மூதாட்டியை கற்பழித்த 53 வயது ‘பெரிசு’ கைது
Read Time:1 Minute, 22 Second
நள்ளிரவில் வீடு புகுந்து 85 வயது மூதாட்டியைக் கற்பழித்த 53 வயது “பெரிசை’ போலீசார் கைது செய்தனர். கோவைப்புதுர் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(85). விதவை. தனியாக வசித்துவந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(53). கடந்த மூன்று மாதங்களாக மூதாட்டி வீட்டிற்கு சென்று ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதை கண்டித்த மூதாட்டி, உறவினர்களிடம் தெரிவித்தார். உறவினர்கள் அவரைக் கண்டித்தனர்.நேற்று முன்தினம் இரவு, தங்கவேல் குடிபோதையில் மூதாட்டி வீட்டுக்கு சென்றார். பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் கூடிவிட்டனர். போலீசாரும் வந்தனர். உடலில் காயங்களுடன் இருந்த மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பலாத்காரம் செய்த தங்கவேல் கைது செய்யப்பட்டார்.