வானொன்றில் கசிப்புக் கடத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி
Read Time:1 Minute, 24 Second
வானொன்றில் கசிப்புக் கடத்திச் சென்ற நபரொருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் ஜா-எல பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளனர். ஜா-எல பகுதியின் கந்தப்பல வீதியினூடாக வானொன்றில் கசிப்புக் கடத்திச் செல்லப்படுவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் காத்திருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த வானொன்றை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளனர். வான் சாரதி கலால் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் வானைச் செலுத்தி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, வானிலிருந்து மூடையாக கட்டப்பட்டிருந்த கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.