மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை!!
Read Time:1 Minute, 16 Second
நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் எம்.கே.காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 59), என்.எல்.சி. தொழிலாளி.
வீரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார். நேற்று அவரிடம் மது குடிக்க பணம் இல்லை. எனவே தனது மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.
இதனால் விரக்தியடைந்த வீரமணி, வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அங்கு இருந்த பிளேடு கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டது.
உயிருக்கு போராடிய வீரமணியை அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார்.
மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating