ராஜா அண்ணாமலைபுரத்தில் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை!!

Read Time:2 Minute, 0 Second

c825b063-4ded-4bce-ba72-682f5be70e79_S_secvpfசென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டனில் வசித்து வருபவர் கணேஷ் பாண்டி. ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி அபிராமி. இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டுக்கதவை திறந்து வைத்து தூங்கினார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஓட்டம் பிடித்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிராமி கூச்சலிட்டார். இதற்குள் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சரசம்மாள். இன்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டார். அப்போது மர்ம வாலிபர் சரசம்மாள் அணிந்து இருந்த 13 பவுன் செயினை பறித்து அருகில் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் தப்பினார்.

ஆவடி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னை துறைமுகத்தில் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 26–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலூரில் உள்ள உறவினர் திருமண வீட்டுக்கு சென்றார்.

நேற்று இரவு திரும்பி வந்த போது வீட்டு கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்துடன் தி.மு.க. பிரமுகர் கொலை: திருப்பூரில் வாலிபர் கைது!!
Next post பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைவு: குமரியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி!!