அம்பாறை, சம்மாந்துறையிலும், சவளக்கடையிலும் வாலிபர்கள் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 16 Second
அம்பாறை பிரதேசத்தின் சம்மாந்துறை எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணியளவில் சிவராசா பிரதீபன் (வயது-24) என்பவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர் உந்துருளியில் பிரசன்னமான ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி பலியாகியுள்ளார். இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பிரதேசமான சவளக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அண்ணாமலை பகுதியில் காரைதீவை வசிப்பிடமாகக் கொண்ட ரவிச்சந்திரன் சஞ்சீவன் (வயது-16) என்பவர் இனந்தெரியாத ஆயுதபாணிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு குறியாகி பலியானார். மேற்படி நபரது உடலம் நேற்று முன்தினம் முற்பகல் கண்டெடுக்கப்பட்டு கல்முனை மருத்துவமனையில் கையளிக்கப்பட்டது.