லாட்ஜில் மெக்கானிக் தற்கொலை!!
Read Time:1 Minute, 21 Second
மயிலாடுதுறையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் லட்சுமணன் (வயது 22) ஏசி மெக்கானிக். இவர் சென்னை பாரிமுனை போர்ச்சர்ஸ் தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது மின்விசிறியில் லட்சுமணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து எஸ்பிளனேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி அவருடன் வேலை பார்ப்பவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating