லாட்ஜில் மெக்கானிக் தற்கொலை!!

Read Time:1 Minute, 21 Second

80acb74a-556b-4b58-b0ae-61652e334f15_S_secvpfமயிலாடுதுறையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் லட்சுமணன் (வயது 22) ஏசி மெக்கானிக். இவர் சென்னை பாரிமுனை போர்ச்சர்ஸ் தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது மின்விசிறியில் லட்சுமணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து எஸ்பிளனேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி அவருடன் வேலை பார்ப்பவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடைக்கானல் அருகே மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!!
Next post கலைப்பயணம் செல்லும் நடிகை!!