திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2–வது மனைவி ஜோதிக்கு 2 மகள்கள்.
ஜோதியின் மூத்தமகள் கலைச்செல்வி (19). உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பால கிருஷ்ணனின் முதல் மனைவி தனலட்சுமி சமீபத்தில் இறந்துவிட்டார்.
இதையடுத்து பாலகிருஷ்ணனிடம் ஜோதியும், அவரது மகள் கலைச்செல்வியும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆரிநத்தத்தில் உள்ள முந்திரி தோப்பில் நேற்று மாலை மரத்தில் கலைச்செல்வி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜோதி அங்கு விரைந்து வந்து தனது மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.
திருநாவலூர் போலீசில் ஜோதி புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கலைச்செல்வி சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating