தர்மபுரி அருகே பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை!!

Read Time:2 Minute, 14 Second

45131e31-0ccd-4f3c-a8af-b6ef57cfc6bb_S_secvpfதர்மபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவரது மனைவி சின்ன பொண்ணு. இவர்களுக்கு திருமணம் ஆகி பிர்த்திவிராஜ் என்ற 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது

இந்த நிலையில், சின்ன பொண்ணு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இண்டூர் அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் பெண் குழந்தையுடன் நேற்று காலை வீடு திரும்பினர்.

இந்த நிலையில், நேற்று காலை குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது குழந்தையின் சாவில் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பிறந்து ஒரே நாளில் பெண் சிசு இறந்துள்ளததால் டாக்டர்களுக்கு குழந்தையின் சாவில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொலையாக இருக்கலாமோ என சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இச்சம்பவம் குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தை உடல் நிலை சரியில்லாமல் இறந்ததா? அல்லது பெண் சிசு கொலையா? என போலீசார் பெற்றோரிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ!!
Next post இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்!!