நடத்தையில் சந்தேகம்-மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
Read Time:1 Minute, 20 Second
திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேடசந்தூரில் வசிப்பவர் சவுந்தராஜன். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது. இத்தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஜோதிமணி மிகவும் அழகாக இருப்பார். இதனால் அவர் மீது சவுந்தரராஜனுக்கு எப்போதும் ஒரு சந்தேகப் பார்வை உண்டு. இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படுமாம். இந்த நிலையில் ஜோதிமணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்ேபாது அங்கு வந்த சவுந்தரராஜன், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி முருகையன், சவந்தரராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.