கவுண்டம்பாளையத்தில் 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பூமிகா(15). 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
மூர்த்தி இறந்து விட்டார். பூமிகா தனது சித்தப்பா கார்த்திக் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் பூமிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ்குமார்(வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
அவர்களது திருமணம் இன்று காலை கவுண்டம்பாளையம் நஞ்சுகுட்டி லே அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெற இருந்தது.
இந்த தகவல் பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழுவுக்கு கிடைத்தது. அவர்கள் துடியலுர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று காலை திருமணம் நடைபெற உள்ள கோவிலுக்கு வந்தனர்.
சிறுமிக்கு (பூமிகா) 15 வயது தான் ஆகிறது. எனவே திருமணம் செய்யக்கூடாது. திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறினார்கள். பின்னர் சதீஷ்குமார், பூமிகா குடும்பத்தினரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Average Rating