காளையார்கோவிலில் சிறுநீர் கழிக்க சென்ற கைதி தப்பி ஓட்டம்!!

Read Time:1 Minute, 25 Second

2fde112c-ef01-4d2b-a26c-aa71f03789ed_S_secvpfமதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவா என்ற சத்தியகுமார் (வயது 23). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போலீஸ் சரகத்தில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து இருந்தனர்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் ஆயுதப்படை போலீசார் 2 பேர் சிவாவை மதுரையில் இருந்து திருவாடானை கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக ஒரு தனியார் பஸ்சில் மதுரை கொண்டு சென்றனர்.

இரவு 7.15 மணி அளவில் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சிவா கூறினார். இதைத் தொடர்ந்து 2 போலீசாரும், அவரை பஸ்சில் இருந்து இறங்கி பஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய சிவா என்ற சத்தியகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!
Next post பிளஸ்–2 தேர்வில் 1000 மதிப்பெண் எடுக்க முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை!!