உ.பி.யில் தொடர் கொடூரம்: டெல்லி பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்காரம்!!

Read Time:1 Minute, 26 Second

01bac45e-a4dd-4cf1-9e5a-df9949757a34_S_secvpfபாலியல் பலாத்கார சம்பவங்கள் தினசரி செய்திகளாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி பல்கலைகழகத்தில் பி.காம் படித்து வரும் மாணவி நேற்று காலை 10 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள இண்டர்நெட் செண்டரில் தேர்வு முடிவுகளைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சச்சின் லலித் என்ற இருவரும் அந்த பெண்ணை தங்கள் வீட்டிற்கு கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாதகாரம் செய்துள்ளனர். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கதறியபடியே நடந்த சம்பவத்தைக் கூறவே அவரது குடும்பத்தினர் கவி நகர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!!
Next post கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!