மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஹாஸ்டல் காவலாளி, சமையல்காரர்!!

Read Time:2 Minute, 4 Second

c979fa11-4b9f-4b03-847b-0e65578c7329_S_secvpfமகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரங்களின் உள்ள மனநிலை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் உறைவிட பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்திலேயே ஹாஸ்டலும் இயங்கி வருகிறது.

இதில் கிஷான் பவ்னி காவலாளியாகவும், பாரதம் காம்ப்ளி என்பவர் சமையல் காரராகவும் வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மனநிலை பாதித்த ஒரு பெண்ணை கற்பிழித்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால், உன்னுடைய தவறான படங்களை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த மாணவி இத்தகவலை வெளியில் சொல்லவில்லை. இந்த சம்பவம் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தந்தை விசாரித்துள்ளார். அப்போது மேற்கொண்ட தகவலை கூறி அதனால் தற்போது கர்ப்பம் அடைந்திருப்பதையும் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை ராண பிரதாப் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. சம்பவம் நடைபெற்ற ஹாஸ்டலில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பி.ஏ.வாணி சோதனை நடத்தினார். அப்போது அங்கு பெண்கள் உள்பட 47 பேர் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு!!
Next post வேகமாக சென்ற காரை பேனட்டில் ஏறி நிறுத்திய டெல்லி காவலர் – 200 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்!!