அநுராதபுரத்தில் ஊரடங்கு தளர்வு சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது
Read Time:1 Minute, 15 Second
அநுராதபுரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை அமுல்படுத்தபபட்ட ஊரடங்கு உத்தரவு மாலை 4 மணியுடன் நீக்கப்பட்டது. விமானப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே இந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுக்காலை அமுலுக்கு வந்தது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட தேடுதலில் 12 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எட்டுப் பேர் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்தனர். எனினும், நகரில் கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.