பைக்கில் குடை பிடித்து சென்ற ஆசிரியை கீழே விழந்து பலி

Read Time:1 Minute, 30 Second

landscape17.gifதிருநெல்வேலி: மழையின்போது குடை பிடித்தபடி மோட்டர் சைக்கிளில் கணவருடன் சென்ற ஆசிரியை பலத்த காற்று வீசியதில் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை சர்வ ஞானதெருவை சேர்ந்தவர் வடிவேல். பலசரக்கு கடை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி லோகநாயகி. இவர் சங்கரன்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையையாக பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து பாளையங்கோட்டை புது பஸ் நிலையத்திற்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மழை பெய்ததால் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது காற்று பலமாக வீசியதால் குடை லோகநாயகியை நிலை தடுமாற வைத்தது. இதில் லோகநாயகி சாலையில் விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அநுராதபுரத்தில் ஊரடங்கு தளர்வு சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது
Next post ராமேஸ்வரம்:நடுக் கடலில் நான்கு யாழ் தமிழர்கள் கைது