2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!!

Read Time:4 Minute, 29 Second

e60e4b2a-57a1-4f4a-95fa-c66a529d465a_S_secvpfஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வட்டிஇன்ட்லு கிராமத்தில் ஒரு விவசாய கிணற்றில் 2 பெண் குழந்தைகள் இறந்து கிடப்பதாக கங்கவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் கங்கவரம் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களின் உதவியோடு 2 பெண் குழந்தைகளின் பிணங்களை மீட்டனர். 2 குழந்தைகளுடன், பெண்ணும் பிணமாக கிடந்தார். பெண்ணின் பிணத்தை கிராம மக்களால் மீட்க முடியவில்லை.

உடனே பலமநேர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து, பெண்ணின் பிணத்தை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வட்டிஇன்ட்லு கிராமத்தை சேர்ந்த ஜெயராம் (வயது 32) என்பவரின் மனைவி மற்றும் குழந்தைகள் என தெரிய வந்தது. ஜெயராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர், போலீசாரிடம் தெரிவித்த விவரங்கள் வருமாறு:–

நான், கங்கவரம் மண்டலம் வட்டிஇன்ட்லு கிராமத்தில் வசித்து வருகிறேன். கர்நாடக மாநிலம் மாரேடுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரியம்மாள் (28) என்பவருக்கும், எனக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தலைப்பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சில நாட்களிலேயே இறந்து விட்டது. அதைத்தொடர்ந்து 2–வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் சில நாட்களிலேயே இறந்து விட்டது.

அதைத்தொடர்ந்து 3–வது பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திரிஷா என பெயரிட்டோம். அவளுக்கு 7 வயதாகிறது, அவள் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். 4–வது பிரசவத்திலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹேமஸ்ரீ என பெயர் வைத்தோம். அவளுக்கு 2 வயதாகிறது, அவளை பள்ளியில் சேர்க்கவில்லை, வீட்டில் உள்ளாள்.

4 பிரசவத்திலும் பெண் குழந்தைகளே பிறந்ததால் எனக்கு வேதனையாக இருந்தது. எனது மனைவியான ஈஸ்வரியம்மாளிடம் உனது தங்கையை எனக்கு 2–வதாக திருமணம் செய்து வைத்தால், ஆண் குழந்தை பிறக்கும், எனவே உன்னுடைய தங்கையை எனக்கு 2–வதாக திருமணம் செய்து வை என வலியுறுத்தினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் நான் எனது மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கினேன்.

இந்த தகவலை ஈஸ்வரியம்மாள் அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், உடனடியாக ஈஸ்வரியம்மாளின் தங்கையை வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஈஸ்வரியம்மாளை தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினேன்.

கடந்த 19–ந்தேதி (செவ்வாய்கிழமை) எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. என்னிடம் கோபித்து கொண்டு ஈஸ்வரிம்மாள், இரு குழந்தைகளுடன் வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் கிணற்றில் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜெயராமை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்!!
Next post மூட நம்பிக்கையின் உச்சம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நடக்க வைத்த சூனியக்காரி!!