ஐதராபாத் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை!!

Read Time:2 Minute, 1 Second

63f3a77e-abb3-40fd-b99a-03743c788c4c_S_secvpfஐதராபாத் அருகே நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் உள்ளது இஜ்ரா சித்தப்பள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி விடுமுறை என்பதால் ஐதராபாத் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தந்தை கமலுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். இரவு 8.30 மணி அளவில் தண்ணீர் குடிக்க இருவரும் இறங்கினர். பாதை ஓரம் இருந்த அடி பம்பில் தண்ணீர் அடித்து குடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஆட்டோவில் 5 பேர் வந்து இறங்கினர். அவர்கள் கமலை அடித்து உதைத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் சிறுமியை தூக்கிச் சென்றனர். பார்வாத் என்ற கிராமத்தின் ஒதுக்குப் புறமான இடத்துக்கு தூக்கிச் சென்ற அவர்கள் அங்கு சிறுமியை 5 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

இதில் சிறுமி மயக்கமடைந்தாள். கண் விழித்தால் தங்களை காட்டி கொடுத்து விடுவார் எனக் கருதிய அந்த காம வெறியர்கள் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

இதற்கிடையே மயக்கம் தெளிந்த கமல் மாயமான மகளை தேடினார். கண்டுபிடிக்க முடியாததால் பந்தவாரம் போலீசில் புகார் செய்தார்.

பார்வாத் பகுதியில் சிறுமி பிணமாக கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

சிறுமியை கற்பழித்து கொன்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவை அருகே தம்பிகளிடம் தூக்கு போடுவது பற்றி நடித்து காட்டிய மாணவி சாவு!!
Next post மீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை!!