காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு

Read Time:4 Minute, 33 Second

chiranjeevi.jpgதெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்தவாரம் 17-ந்தேதி ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறினார். காதலர் ஷிரிஷ்பரத்வாஜுடன் செகந்திராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் தலைமறை வாகி விட்டார்கள். மகள் வீட்டைவிட்டு வெளி யேறியதால் சிரஞ்சீவியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். சிரஞ்சீவி மகள் திடீர் திருமணம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான ரசிகர்களும், நலம் விரும்பிகளும் சிரஞ்சீவி வீட்டின் முன் கூடினார்கள். அவர்களை சிரஞ்சீவி சந்திக்க வில்லை. 2 நாளில் தனது முடிவை அறிவிப்பதாக சிரஞ்சீவியின் உறவினர் ஒருவர் தெரி வித்தார். இதற்கிடையே சிரஞ்சீவி மனம் மாற்றம் அடைந்தார். அவர் மகள் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி பத்திரிகை அலு வலகங்களுக்கு `பேக்ஸ்’ மூலம் அறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சிரஞ்சீவி கூறியிருப் பதாவது:-கடந்த 2 நாட்களாக என் மகள் வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சியில் என்னால் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தேன். எனது மகள் ஸ்ரீஜா எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. என் குழந்தைகளின் விருப்பு வெறுப்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பேன். மேஜரான ஸ்ரீஜா எடுத்த இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தது உண்மை.

இப்போது குடும்பத் தினர் அனைவரும் தெளிவாகி விட்டோம். குடும்பத்தினர் அனைவரும் யோசித்து முடிவு எடுத்து இருக்கிறோம். மகள் சந்தோஷமாக இருப்பது தான் எங்களுக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறோம். மகள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் வீட்டுக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

மகள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாததால் பத்திரிகைகள் மூலமாக ஸ்ரீஜாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

“ஸ்வீட்டி ஸ்ரீஜா நீ எங்கிருந் தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உன்னோட சந்தோஷம்தான் என்னோட சந்தோஷம். உன் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.

மகள் ஸ்ரீஜா திருமணத்தால் வேதனை அடைந்த நலம் விரும்பிகள், ரசிகர்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் எல்லோரும் என் மகளை ஆசீர்வதியுங்கள் அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் உதவி. ஸ்ரீராம ரட்ஷா(ராமர் காப்பாற்றுவார்). இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

இதற்கிடையே ஸ்ரீஜா- பரத்வாஜ் தம்பதி மைசூரில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷிரிஷ் நண்பர்களிடமும், பெற்றோர்களிடமும் இதுபற்றி கேட்ட போது தங்களுக்கு ஷிரிஷ் எங்கிருக்கிறான் என்று தெரியாது, செல் போனும் `சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
indsiranseevidaugther.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரட்டை விரலுடன் 2 ரூபாய் – அதிமுகவினர் குஷி!
Next post தீயணைப்பு வீரரை கம்பியால் தாக்கிய சக வீரருக்கு வலைவீச்சு