நியூயார்க் நகரில் வீடற்ற தம்பதியர் நாய் வண்டியில் தூங்கும் அவலம்!!
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் தனித்தனி சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் வாடும் தம்பதியரான மைக்கேல் பில்கிரிம்(45) மற்றும் அவரது மனைவியான சாரிஸ் பஸ்கல்(40) ஆகியோர் கடந்த ஒருமாத காலமாக நடமாடும் நாய் கூண்டில் படுத்துறங்கி வரும் அவலநிலை தற்போது தெரியவந்துள்ளது.
இங்குள்ள 11-வது கிழக்கு தெருவில் அனாதையாக கைவிடப்பட்ட ஒரு நாய் வண்டியில் அடைக்கலம் புகுந்துள்ள இந்த தம்பதியர் உடல்களை குறுக்கியபடி இந்த கூண்டுக்குள் இரவுப் பொழுதுகளை கழித்து வருகின்றனர். நிரந்தர வீட்டு வசதிக்காக அரசிடம் விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் உள்ளூர் போலீசாருக்கு பயந்து அவ்வப்போது தங்கள் வீட்டை வேறு இடத்துக்கு தள்ளிச் செல்வதாக வருத்தத்துடன் கூறுகின்றனர்.
Average Rating