அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!!
Read Time:1 Minute, 15 Second
பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி 100 ரூபாய் நோட்டுகள், விலை மதிப்புள்ள அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர், தரமான பேப்பர்கள், கட்டிங் மெஷின் உள்ளிட்ட பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்ற பயத்தில் 100 ரூபாய் நோட்டு அடித்த இருவரும் பீகாரில் உள்ள குறிப்பிட்ட கடைகள், பெட்ரோல் பங்குகள், கிராம சந்தைகள் என்று சாமர்த்தியமாக பல இடங்களில் அச்சடித்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Average Rating