மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!
மாதவரம் அருகே உள்ள சுப்பிரமணிய கார்டன் பகுதியில் வசித்து வருபவர் குமார். தொழில் அதிபர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார். இன்று காலை குமாரின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி குமாருக்கும், கொடுங்கையூர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பீரோவில் இருந்த 40 பவுன் நகை ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளை கும்பல் அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.
குமார் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழலை அடுத்த காவாங்கரை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் வாளீஸ்வரன். டாஸ்மாக் ஊழியர். இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மணலியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை ரூ.25 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating