கொடூரத்தின் உச்சம்: பெற்ற மகளையே ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!!
சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே குடும்பமே, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருப்பது பெண் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பலமடங்கு அதிகப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகிவீர்நகரில் வசிக்கும் 16 வயது இளம்பெண் நேற்று போலீசில் அளித்துள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரளித்துள்ள அந்தப் புகாரின்படி, டிரைவராக வேலை பார்க்கும் அவரது அப்பா பிரமொத் குமார் ஷர்மா, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அழுது கொண்டே அந்த பெண் தனது அம்மாவிடமும் சகோதரனிடமும் கூற அவர்களிடமிருந்து வந்த பதில் ‘இதப் பத்தி யார்கிட்டயும், எதுவும் பேசாதே’ என்பதுதான்.
இதனால் கடந்த ஒரு வருடமாக நரக வேதனையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது அப்பா, இந்த காரியத்திற்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating