ரெயில் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை: தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தது!!
Read Time:1 Minute, 17 Second
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் இங்குள்ள இந்தூரில் இருந்து ஷுஜால்பூர் செல்லும் ரெயிலில் நேற்று ஏறினார்.
ரெயில் புறப்படுவதற்கு சற்றுநேரம் முன்னதாக கடுமையான இடுப்பு வலியால் துடிதுடித்த அவர், ரெயிலின் உள்ளே இருக்கும் கழிவறைக்கு சென்றார். உள்ளே குறைப்பிரசவமாக பிறந்த அந்த குழந்தை, கழிவறை பீங்கானின் அடிப்பகுதியில் இருக்கும் துவாரத்தின் வழியாக வழுக்கி, தண்டவாளத்தில் விழுந்தது.
வெளியே ஓடோடிச் சென்ற அந்தப் பெண்ணின் கணவர் சிலரின் துணையுடன் அந்தக் குழந்தையை உயிருடன் தூக்கி வந்தார். சிறு காயங்களுடன் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
Average Rating