மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!

Read Time:1 Minute, 22 Second

b9257b0c-d9c4-49d3-8e70-af008e20672f_S_secvpfமறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஸ் நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள சிறுகுன்றத்தை சேர்ந்த அருண்குமார், விஜயகுமார், கமலக்கண்ணன், முருகன் என்பதும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

கடந்த மாதம் செங்கல்பட்டு டோல்கேட் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்தது உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதியில் 7 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!!
Next post கரூரில் மது போதையில் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு: மகளிர் போலீசில் தாய் புகார்!!