ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீரில் அமுக்கி மனைவியை கொன்ற கணவர் கைது!!

Read Time:1 Minute, 17 Second

53819fff-0c9e-459e-b25b-d6ab601b542b_S_secvpfவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவரது மனைவி சுந்தரலட்சுமி (32). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

கண்ணன் ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் சுந்தரலட்சுமி வீட்டில் இறந்து கிடப்பதாக, கிருஷ்ணன் கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சுந்தரலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சுந்தரலட்சுமியின் தந்தை சுந்தரவடிவேல் போலீசில் புகார் செய்துள்ளார். தனது மகளை அவரது கணவர் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டார் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானேவில் கணவன் மீது மனைவி கற்பழிப்பு புகார்!!
Next post காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை!!