காஷ்மீரில் கடைக்காரர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்!!
காஷ்மீரின் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படும் சோபூரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மெக்ராஜ் உத்தின் பாத். இவர் இன்று காலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேனில் துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள், பாத்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி வீட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த அவரை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட வியாபாரி பாத், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1990–ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்தார். சிறை தண்டனைக்கு பின்பு கோழி வியாபாரம் பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
Average Rating