21-ம் நூற்றாண்டிலும் மாறாத மனிதர்கள்: உயர்சாதி நபரின் மீது நிழல் பட்டதால் தலித் சிறுமி அடித்து, உதைத்து சித்ரவதை!!

Read Time:2 Minute, 1 Second

063ecea4-b2cd-42c7-8c36-a01ce3abdffd_S_secvpfமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உயர்ந்த சாதியை சேர்ந்த ஒரு நபரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதால் அவளை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இங்குள்ள சட்டர்பூர் மாவட்டம், கணேசாபுரம் கிராமத்தை சேர்ந்த புரான் யாதவ் என்பவர் கடந்த 13-ம் தேதி ஊர் தெரு வழியாக நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள குடிநீர் பம்பில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த தலித் சிறுமியின் நிழல் அவர் மீது பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, புரான் யாதவின் குடும்பத்தார் அந்த சிறுமியை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்துள்ளனர். மேலும், இனிமேல் உன்னை குடிநீர் பம்பின் அருகே பார்த்தால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தால் உங்கள் குடும்பத்தையே தீர்த்துக்கட்டி விடுவோம் என புரான் யாதவின் உறவினர்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாத அந்த தலித் குடும்பம் போலீசில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இன்றுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!
Next post கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!