ஆரணி அருகே இந்து முன்னணி பிரமுகரை கத்தியால் வெட்டி வழிப்பறி!!
ஆரணி படியராஜா தெருவை சேர்ந்தவர் தாமு (வயது 34). இவர் ஆரணி இந்து முன்னணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் தாமு மேல்மலையனூர் கோவிலுக்கு அமாவாசை ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் சிறுநீர் கழிப்பதற்காக நெசல் கூட்டு ரோடு அருகே நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் கத்தியை காட்டி தாமுவை மிரட்டினார்கள். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை கேட்டனர். கொடுக்க மறுத்த அவரை கத்தியால் வெட்டி அந்த மர்ம நபர்கள் 2 பேரும் தாமு வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக பல வாகனங்கள் வந்தன. இதை பார்த்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அந்த வழியாக வந்தவர்கள் கத்தி வெட்டில் காயமடைந்த தாமுவை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆரணி நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating