புதுவையில் என்ஜினீயரிங் மாணவர் கற்பழித்ததால் குழந்தை பெற்ற 10–ம் வகுப்பு மாணவி!!

Read Time:2 Minute, 0 Second

1b922f47-83f1-4e97-a699-78b1b5d4ef60_S_secvpfஏனாமை சேர்ந்தவர் நாகூர்பாபு (வயது 29). புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். புதுவை ரெயின்போ நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.

இந்த டாக்டரின் கார் டிரைவருக்கு ஒரு மகள் இருக்கிறார். 15 வயது நிரம்பிய அவர் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

டாக்டர் வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது நாகூர் பாபுவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி மாணவியுடன் மாணவர் நாகூர்பாபு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து அதிகார பூர்வம் இல்லாத வகையில் மாணவியை மாணவர் திருமணம் செய்ததாக தெரிகிறது.

சமீபத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த மாணவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இது தொடர்பாக மாணவியும், அவரது பெற்றோரும் குழந்தைகள் பாதுகாப்பு சங்க தலைவி வித்யா ராம்குமாரிடம் தெரிவித்தனர். அவர் பெரியகடை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாணவர் நாகூர்பாபு மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரணி அருகே இந்து முன்னணி பிரமுகரை கத்தியால் வெட்டி வழிப்பறி!!
Next post பேஸ் புக் மூலம் காதல் திருமணம்: வாழ்வை இழந்த இளம்பெண்!!