கேரளா தலைமை செயலகம் அருகே பரபரப்பு: ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் நடிகரை சுற்றிவளைத்து கைது செய்த நிஜப் போலீசார்!!
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குமரபுரம் பகுதியை சேர்ந்தவர், சந்தோஷ். கடந்த 2006-ம் ஆண்டு 15 வயது சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் சுமார் 9 ஆண்டுகாலமாக சந்தோஷை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தின் அருகே நேற்று ஒரு மலையாளப் படத்தின் ‘ஷூட்டிங்’ நடைபெற்று கொண்டிருந்தது. போலீஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கு ஒத்திகையும், படப்பிடிப்பும் நடந்தது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போலீசாருக்கு, இந்த ஷூட்டிங்கில் போலீஸ் சீருடையுடன் இருக்கும் நபரை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது.
அதில் ஒரு போலீஸ்காரர் அளித்த தகவலையடுத்து, விரைந்துவந்த குமரபுரம் போலீசார், கடந்த 2006-ம் ஆண்டு 15 வயது சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொல்ல முயன்று, இத்தனை காலம் தலைமறைவாக இருந்த துணை நடிகர் சந்தோஷை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Average Rating