சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

Read Time:2 Minute, 4 Second

1cf1e62c-cc34-47ca-9f56-e00e6ba015fd_S_secvpfசித்தூர் அடுத்த தொட்டமேடு ராஜா நகர் காலனியை சேர்ந்தவர் புஜ்ஜியம்மா (35). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கோவிந்தசாமிக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கோவிந்தசாமியும், புஜ்ஜியம்மாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் நாளடைவில் இரு குடும்பத்தாருக்கும் தெரிய வந்தது. 2 பேரையும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனாலும் தொடர்பை கைவிட மறுத்த கள்ளக்காதல் ஜோடி வெளியில் சென்று சுற்ற ஆரம்பித்தனர்.

இந்த விவகாரம் காரணமாக இரு குடும்பத்தினரும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி கோவிந்தசாமியும், புஜ்ஜியம்மாவும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

நேற்றிரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த தொட்டமேடு போலீசார் கள்ளக்காதல் ஜோடியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தொட்டமேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 35 பேர் கைது: நடவடிக்கை தொடரும் என உறுதி!!
Next post ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!