பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Read Time:1 Minute, 1 Second
பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், கடந்த மாதம் 8-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் நடந்த கருத்தரங்கின் போது தனது சக ஆண் நீதிபதி தன்னை விடுதிக்கு வரும்படி அழைத்ததாகவும் மேலும் கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அந்த குறிப்பிட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
Average Rating