பெசன்ட்நகரில் ஓட்டல் ஊழியர் தற்கொலை!!
Read Time:58 Second
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலை சேர்ந்தவர் சின்னமணி (26). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வந்தார். ஓட்டலில் வேலை செய்பவர்கள் பெசன்ட்நகர் வண்ணாந்துறை கங்கையம்மன் கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அவர்களுடன் சின்னமணியும் தங்கியிருந்தார். நேற்று இரவு அனைவரும் ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சின்னமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Average Rating