உல்லாசத்துக்கு மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!
Read Time:1 Minute, 8 Second
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் உல்லாசத்துக்கு மறுத்த இரு இளம்பெண்கள் மீது ஆசிட் ஊற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது காம ஆசைக்கு இடம் கொடுக்க மறுத்த உஷா சர்மா மற்றும் பாபி ஆகிய பெண்கள் மீது 12-12-2012 அன்று ஆசிட் வீசிய பவன் குமார்(25) என்பவனை கைது செய்த போலீசார், அவன் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
முசாபர்நகர் மாவட்ட கோர்ட்டில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜ்பிர் சிங், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Average Rating