கோவை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!!

Read Time:3 Minute, 43 Second

03d16b19-4fbd-4ebf-9f79-a5e9264f3bb1_S_secvpfகோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் அனிதா (28). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நான் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையில் ஆராய்ச்சி படிப்புக்காக 2010–ம் ஆண்டு பதிவு செய்தேன். 2 ஆண்டுகள் கடந்த நிலையில் 2012–ம் ஆண்டு எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு சரியாக செல்ல முடியவில்லை. நான் உடல் நலம் தேறி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு சென்றேன்.

அப்போது அங்கு இருந்த ஆங்கில துறையின் தலைவர் எனது வருகை பதிவேட்டை காரணம் காட்டி ஆராய்ச்சி படிப்பை தொடர முடியாது என்றார். மேலும் நான் ஆராய்ச்சி படிப்பை தொடர வேண்டும் என்றால் என்னை அனுசரிக்க வேண்டும், ரூ. 1½ லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் எனது ஆராய்ச்சி பதிவு ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு பேரிடியாக அமைந்தது. இந்த நிலையில் கடந்த 2013–ல் எனது கணவர் என்னையும், எனது குழந்தையையும் தவிக்க விட்டு விட்டு இறந்து விட்டார். இது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையின்பேரில் மீண்டும் நான் ஆராய்ச்சி படிப்பை தொடர பல்கலைக்கழகத்தை அணுகினேன். எனது நிலையை அறிந்து பரிதாபப்பட்ட துணை வேந்தர் ஆராய்ச்சி படிப்பை மீண்டும் தொடர உதவிகள் செய்தார். ஆனால் பல்கலைக்கழக ஆங்கில துறை தலைவரோ மீண்டும் அதே போல் பேசினார். மேலும் 1½ லட்சம் பணம் வேண்டும் என்றும் மிரட்டினார். துறை தலைவரின் இந்த செயலுக்கு மேலும் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் உடந்தையாக இருந்தார். இவர்களால் நான் எனது படிப்பை தொடர முடியவில்லை. இதே போல் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே ஆங்கில துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அனிதா நிருபர்களிடம் கூறியதாவது:–

எனக்கு கொடுத்த செக்ஸ் புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தேன். அவர் இது குறித்து விசாரணை நடத்த பேரூர் டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார். மேலும் துறை தலைவருக்கு ஆதரவாக சிலர் என்னிடம் பேசியதை செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன் என்றார்.

ஆராய்ச்சி மாணவி துறை தலைவர் மீது செக்ஸ் புகார் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனின் குடிப்பழக்கத்தால் தாய் தற்கொலை!!
Next post வகுப்பறையில் ஆபாச படம்…குடிபோதையில் ரகளை… கோவையில் பாதை மாறும் மாணவிகள்!!