ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!
Read Time:1 Minute, 10 Second
மாரவில – தோடுவாவ பிரதேசத்தில் தமது ஆதரவாளர் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 01.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு மாரவில பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating