மஹிந்த அபேகோன் பிணையில் விடுதலை!!
தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய மாகாண சபை தலைவர் மஹிந்த அபேகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அபேகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த கண்டி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இவர் 30,000ரூபா ரொக்கப் பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் வெளிநாடு செல்வதாயின் நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கலஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001ம் ஆண்டு கண்டி – கலஹா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 30ம் திகதி கண்டி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Average Rating