ஆண்டிப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு!!
Read Time:1 Minute, 12 Second
ஆண்டிப்பட்டி அருகே மேல்வாலிப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் வந்துள்ளது. அதனை தோட்டத்தில் உள்ள நாய்கள் விரட்டி கடித்துள்ளது. இதில் மானின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளது.
இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் மம்முனிஅய்யர் வருசநாடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து வருசநாடு வனச்சரகர் கர்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை கைப்பற்றி மயிலாடும்பாறை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் ஒயிலான் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே புதைக்கப்பட்டது.
இது குறித்து வருசநாடு வனத்துறையினர் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating