பெங்களூர் அருகே சிறுமியை ஈவ் டீசிங் செய்த 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!
கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்துவந்த 12 வயது சிறுவனை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரின் புறநகர் பகுதியான விஜயபுரா பகுதியில் வசித்து வந்த அந்த சிறுமியை கொல்லப்பட்ட சிறுவன் வெகுநாட்களாக கிண்டலும் கேலியும் செய்து வந்ததாக கூறப்படுகின்றது. ஈவ் டீசிங்குக்கு உள்ளான அந்த சிறுமி, தனது தாயரிடம் பலமுறை முறையிட்டுள்ளார். கிண்டல் செய்வதாக கூறப்பட்ட சிறுவனை அந்த பெண்ணின் தாயார் பலமுறை கண்டித்துள்ளார்.
இதைப்பொருட்படுத்தாத சிறுவன் அதே சிறுமியை விரட்டி, விரட்டி கிண்டல் செய்ததாக மீண்டும் அறிந்த அவரது தாயார், ஆத்திரம் அடைந்தார். நேற்று ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற அவர், வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து அந்த சிறுவனை சரமாரியாக தாக்கினார். ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த பெண்ணை கைது செய்தனர்.
Average Rating