ஐதராபாத்தில் 14 சதவீத குழந்தைகள் செக்ஸ் சித்ரவதையில் சிக்குகிறார்கள்: ஆய்வில் தகவல்!!
இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ‘ஸ்மார்ட் நகர திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ஆந்திராவில் தெருவோர குழந்தைகள் நிலை பற்றி ஆய்வு மேற்கொண்டது.
ஐதராபாத்தில் மட்டும் 10 ஆயிரம் தெருவோர குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இவர்களில் 14 சதவீத குழந்தைகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
20 சதவீத குழந்தைகள் போலீசாரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். 33 சதவீத குழந்தைகள் தங்கள் உடமைகளை திருட்டு கொடுத்து விடுகிறார்கள். மேலும் 38 சதவீத குழந்தைகள் பயந்த நிலையில் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.
மேற்கண்ட தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத், செகந்திராபாத், விசாகப்பட்டினம் ரெயில் நிலையங்களையொட்டிதான் அதிக தெருவோர குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம்இல்லை என்றும், அரசாங்க சலுகைகளை பெற ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலை இருப்பதாக ஆய்வு நடத்திய தன்னார்வு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
Average Rating