புதிய அரசாங்கம் மிதக்கும் எலும்புக்கூடு மனிதர்களை உருவாக்கியது!!

Read Time:1 Minute, 57 Second

16459953701230280413mahin proud2இந்த அரசாங்கத்தினால் மிதக்கும் எலும்புக்கூடு போன்ற மனிதர்களே உருவாகுவார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சீனி போலைக்கு மக்கள் ஏமாறத் தேவையில்லை என்றும் கடந்த காலத்தில் கொத்தமல்லிக்கு மாத்திரமே விலை குறைக்கப்பட்டதாகவும் ஆனால் பின்னர் அதற்கு விலை உயர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஜகத் குமாரவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய 2014ம் ஆண்டு பெறப்பட்ட கடனைவிட இந்த அரசாங்கம் 100 நாட்களில் அதிக கடன் பெற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்க அதிகவேக வீதி திருத்தம் என்ற பெயரில் மூன்று தடவைகள் கடன் பெறப்பட்டுள்ளதாகவும் ஆனால் வேலை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

100 நாட்களுக்குள் ராஜபக்ஷ ஒருவரை சிறைக்குள் தள்ள நிறைவேற்று சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டதாகவும் சமுர்த்தி பெறுவேருக்கு 2500 ரூபா வழங்கியதால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாகவும் மஹிந் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!
Next post 5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!