(PHOTOS) ‘உலக இளைஞர் திறன் தினம் 2015′..!!
மன்னார் மாவட்ட தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து சிறப்பித்தனர். உலக இளைஞர் திறன் தினம் 2015ஐ மன்னார் மாவட்ட தொழில் நுட்பக்கல்லூரியின் தலைமையில் தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து மிக விமரிசையாக 15 ஜீலை 2015 கொண்டாடினர்.
இன்நிகழ்விற்கு சர்வதேச தொழில்ஸ்தாபனம்(ILO), மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கானஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP) திட்டத்தினூடாக நிதியுதவி வழங்கியது.
இவ் ’15ஜீலை 2015′,உலக இளைஞர் திறன் தினமாக 11 நவம்பர் 2014இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது. இது இலங்கை அரசால் பிரேரனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள் முதல் முறையாக இவ் நிகழ்வை மிகவும் உற்சாகத்துடனும் விமர்சையாகவும் கொண்டாடினர். நிகழ்வில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அமர்வு தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலமும் மற்றும் மன்னார் தொழில் நுட்ப கல்லூரியில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களால் கண்காட்சியும், செயல்முறை விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், பாடசாலை இடைவிலகிய மாணவர்கள் என பலர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மன்னார் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் திரு செந்தில்வேல்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் SARVODAYA,முறைசாரா கல்வி பிரிவு,NAITA போன்ற நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கியது.
இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் பொருத்தமான தொழிலை, கல்வியை தொடர தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
Average Rating