தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!
தூத்துக்குடி ஆதிபராசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காலில் அகமது (வயது55), தொழிலதிபர். இவர் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீடு திரும்பிய காலில் அகமது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளை சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating