மணிரத்தினம் படம்:மறைமுக தூண்டில் போட்ட ஸ்ரேயா!
நடிகை ஸ்ரேயாவுக்கு நடிப்பு வரவில்லை” -தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சினிமா விமர்சனம் செய்துவரும் நடிகை சுஹாசினி, சிவாஜி படத்தை விமர்சனம் செய்யும்போதுதான் இப்படி குறிப்பிட்டிருந்தார். நீரு பூத்த நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்த இந்த நெருடலை ஒரே பதிலில் குளிர வைத்துவிட்டார் ஸ்ரேயா! என் நடிப்பை பற்றி விமர்சிக்கவும், எனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லவும் அவருக்கு நிறைய தகுதி இருக்கிறது. டைரக்டர் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நன்றாக நடித்து சுஹாசினியிடம் நல்ல நடிகை என்று பெயர் வாங்குவேன். மாறாத புன்னகையோடு ஸ்ரேயா வீசிய இந்த கல்லில் இரண்டு மாங்காய்கள் விழ வாய்ப்புள்ளதே, அதுதான் சுவாரஸ்யம். முதல் மாங்காய், மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டாச்சு. இரண்டாவது மாங்காய், சுஹாசினிக்கும் விளக்கம் சொல்லியாச்சு! யார் சொன்னது ஸ்ரேயா சின்ன பொண்ணு என்று!